உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது

Published On 2022-12-13 09:23 GMT   |   Update On 2022-12-13 09:23 GMT
  • பெரும்பள்ளம் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • இதனையடுத்து போலீசார் ராமசாமி மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் நரசாபரம் பெரும்பள்ளம் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கே அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (62) என்பவரது சாலை வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் பாலிதீன் கவரில் 100-கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் கைப்பற்றினர்.

போலீசார் விசாரணையில் ராமசாமி கர்நாடக மாநிலம் ஊகியத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், தனது பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள கஞ்சாவை விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் ராமசாமி மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News