உள்ளூர் செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி

Published On 2023-05-15 07:44 GMT   |   Update On 2023-05-15 07:44 GMT
  • திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ஒரு மகள் உள்ளார்.
  • ஒரு லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் கடம்பூர் சுஜில்கரையை சேர்ந்தவர் மாதன். இவரது மகன் பட்டான் (33). டிரைவர். இவரது மனைவி ரம்யா.

இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது இவர்கள் சத்தியமங்கலம் கொழிஞ்சனூர் பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று பட்டான் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது கெஞ்சனூர் பிரிவு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டு இருந்த போது ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது. இதில் கீழே விழுந்த பட்டானுக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை பட்டானை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அப்போது பட்டானை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News