உள்ளூர் செய்திகள்

இறைச்சி, மீன் கடைகள் வெறிச்சோடியது

Published On 2022-09-18 09:53 GMT   |   Update On 2022-09-18 09:53 GMT
  • இன்று புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் மீன் கடைகள் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
  • இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

ஈரோடு:

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அசைவ பிரியர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். இதனால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்படும்.

இந்நிலையில் இன்று புரட்டாசி மாதம் பிறந்தது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெறும்.

இன்று புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் மீன் கடைகள் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பாலம் அருகே மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இன்று காலை முதலே மக்கள் கூட்டம் இன்றி மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஒரு சிலர் மட்டுமே மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

Tags:    

Similar News