உள்ளூர் செய்திகள்

சிப்ஸ் மாஸ்டர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-06-13 15:25 IST   |   Update On 2023-06-13 15:25:00 IST
  • அறையில் கணவர் தூக்குபோட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு 46 புதூர் வேல பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கில்பர்ட் (30). இவரது மனைவி ஆரோக்கியரோசாலி (27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ஜான் கில்பர்ட் லக்காபு ரத்தில் உள்ள ஒரு சிப்ஸ் கம்பெனியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அவரது மனைவி கண்டித்தும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிக்ஸ் கம்பெனி க்கு விடுமுறை என்பதால் வாங்கிய சம்பளத்தில் அதிக அளவில் மது அருந்திவிட்டு குடிபோதையில் ஜான் கில்பர்ட் வீட்டுக்கு வந்து உள்ளார். அவர் மனைவி யிடம் தகராறில் ஈடுபட்டு அவர் வெளியே போகச் சொல்லி திடீரென வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.

சிறிது நேரம் பார்த்து விட்டு அவரது மணி வீட்டின் கதவை தட்டி யுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கணவர் தூக்கு போட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு சிகிச்சை க்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே வரும் வழி யிலேயே ஜான் கில்பர்ட் இறந்து விட்டதாக தெரி வித்தார்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜான் கில்பர்ட் உடலைப் பார்த்து அவரது மனைவி- குழந்தை கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News