உள்ளூர் செய்திகள்

மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

Published On 2022-12-16 15:26 IST   |   Update On 2022-12-16 15:26:00 IST
  • சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது.
  • பெண்கள் கலந்து கொண்ட சென்னி ஆண்டவர் குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னிமலை:

சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது.

பின்னர் 7-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர்.

13-ந் தேதி இரவு பெண்கள் கலந்து கொண்ட சென்னி ஆண்டவர் குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கோவிலுக்கு உட்பட்ட திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர்.

இரவு கம்பம் பிடுங்கி கிணற்றில் விடப்பட்டது.

Tags:    

Similar News