உள்ளூர் செய்திகள்

மெஷின் ஆபரேட்டர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-11-26 07:01 GMT   |   Update On 2023-11-26 07:01 GMT
  • பேன் மாட்டும் கொக்கியில் ஜீவா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.
  • சத்தியமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப் பேட்டை, பிரிட்டோ காலனி யை சேர்ந்தவர் ஜீவா (35). இவர் குள்ளங்காட்டில் உள்ள தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி தனபாக்கியம் (29). கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜீவாவின் அண்ணனும், அதைத்தொடர்ந்து அவரது பாட்டியும் இறந்துவிட்டனர்.

இதனால் கடுமையான மன அழுத்தத்துக்குள்ளான ஜீவா தொடர்ச்சியாக மது அருந்த ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜீவா தொடர்ந்து, மது அருந்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று மாலை தனபாக்கியம் அருகில் வசித்து வரும் தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அதிக மது போதையில் ஜீவா அங்கு வந்துள்ளார்.

அப்போது மது அருந்து வது குறித்து தனபாக்கியம், கணவர் ஜீவாவை கண்டித்து ள்ளார். இதையடுத்து இருவரும் அங்கேயே படுத்து தூங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அதிகாலை தனபாக்கியத்தின் தாயார் கண் விழித்துப் பார்த்தபோது ஜீவா அங்கு இல்லை.

இதையடுத்து அருகில் உள்ள தங்களது வீட்டுக்கு தனபாக்கியமும், அவரது தாயாரும் சென்று பார்த்து ள்ளனர். அப்போது வீட்டின் அறையில் பேன் மாட்டும் கொக்கியில் ஜீவா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.

உடனடியாக உறவினர்களின் உதவியுடன் ஜீவாவை மீட்டு சத்தியம ங்கலம் அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர் வரும் வழியி லேயே ஜீவா இறந்து விட்ட தாக தெரிவித்தார்.

இது குறி த்து சத்தியமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News