உள்ளூர் செய்திகள்

லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2022-07-18 09:42 GMT   |   Update On 2022-07-18 09:42 GMT
  • பவானிசாகர் அருகே உடற்பயிற்சி நிலையம் சென்று விட்டு வீடு திரும்பிய மாணவர் மீது லாரி மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தியேலே இறந்தார்.
  • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் பு.புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வருகிறார்.

இவரது மகன் கரண் (20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கரண் உடற்பயிற்சி நிலையத்துக்கு சென்று விட்டு மேட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக தொட்டம்பாளையம் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து பஞ்சாப் செல்வதற்காக எந்திர பாகங்கள் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது.

அப்போது அந்த லாரி எதிர்பாராதவிதமாக கரண் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இற ந்தார்.

இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News