உள்ளூர் செய்திகள்

சிவகிரி அருகே மது விற்றவர் கைது

Published On 2023-09-18 14:18 IST   |   Update On 2023-09-18 14:18:00 IST
  • சிவகிரி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்
  • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகிரி,

ஈரோடு மாவட்டம் சிவகிரி காவல் எல்லைக்குட்பட்ட காகம் கொளத்துப்பாளையம் வாய்க்கால்கரை அருகே எல்லக்கடை செல்லும் சாலையில் அரசு அனுமதி பெறாமல் மதுவிற்பனை நடைபெறுவதாக சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற சிவகிரி போலீசார் அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்த செல்லப்பன் மகன் பழனிசாமி (வயது 42) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 8 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இது சம்பந்தமாக பழனிசாமி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News