உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Published On 2023-07-12 09:43 GMT   |   Update On 2023-07-12 09:43 GMT
கார்த்திக் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கொடுமுடி:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவர் கடந்த 6 மாதமாக ஈரோடு மாவட்டம் பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கார்த்திக் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்ட கார்த்திக் உறவினர்கள் திடீரென கார்த்திக் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அரசு தலைமை மருத்துவமனை போலீசார் மறியலில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கார்த்திக் உறவினர்கள் கூறும்போது, கார்த்திக்கின் 2 கை மணிக் கட்டும் அறுக்கப்பட்டு ரத்த காயம் உள்ளது. எனவே அவரது சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று அவர்கள் கலந்து சென்றனர்.

பின்னர் கார்த்திக் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News