உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி சிறுமி பலி

Published On 2022-07-24 09:58 GMT   |   Update On 2022-07-24 09:58 GMT
  • ஆட்டுக்கொட்டையில் விளையாடியபோது அங்கிருந்த இரும்பு பைப்பை சிறுமி பிடித்துள்ளார். அப்போது அதில் மின்சாரம் தாக்கி சிறுமி சுதேசனா மயக்கமடைந்தார். ன்னர் மேல்சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
  • இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்தோடு:

பவானி லட்சுமி நகர் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமரைகண்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது ஒரே மகள் சுதேசனா (6). சம்பவத்தன்று சுதேசனா அருகே உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டுக்கொட்டையில் விளையாடியபோது அங்கிருந்த இரும்பு பைப்பை சிறுமி பிடித்துள்ளார். அப்போது அதில் மின்சாரம் தாக்கி சிறுமி சுதேசனா மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News