உள்ளூர் செய்திகள்

உணவு டெலிவரி நிறுவன ஊழியர் சிறையில் அடைப்பு

Published On 2023-03-16 09:12 GMT   |   Update On 2023-03-16 09:12 GMT
  • 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார்.
  • ஏழுமலை ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

ஈரோடு:

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (21). இவர் ஈரோட்டில் உணவு சப்ளை செய்யும் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.

அப்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனை லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வரும் 17 வயது மாணவியுடன் ஏழுமலைக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் ஏழுமலை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ஏழுமலை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் 2 பேரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து ஏழுமலை கைது செய்யப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டார்.

Tags:    

Similar News