உள்ளூர் செய்திகள்
வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
- சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
192 நீர் நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக மண், வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இந்நேர்வில் விவசாயிகளின் நலன் கருதி மண், வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பெற்று பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க ஏதுவாகும் வகையில் சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு வரப்பெறும் விண்ணப்பங்களின் பேரில் உடனுக்குடன் பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் விவசாய காரியங்களுக்காக மண், வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.