உள்ளூர் செய்திகள்

ரோடு அகலப்படுத்தும் பணிக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2023-05-20 14:05 IST   |   Update On 2023-05-20 14:05:00 IST
  • இலகுரக வாகனங்கள், கனரக மற்றும் மிகவும் கனரக வாகனங்கள் ஏராள மாக சென்று வருகிறது.
  • சிறு ரோடு அகலப்படுத்தும் பணியினால் ஓரளவு விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.

அம்மாபேட்டை,

தொப்பூர் - பவானி ரோடு இரு புறமும் தலா1.5 மீட்டர் அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் நெடுஞ்சாலை துறையினர் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலை துறை எல்லைக்கு அளவீடு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அம்மாபேட்டை பகுதியில் நெரிஞ்சிப்பேட்டை, அம்மா பேட்டை, சித்தார் ஆகிய பகுதிகளில் இருபுற எல்லை களிலும் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை எல்லை வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதால் ரோடுகள் பார்ப்பதற்கு அகலமாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் இருந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் சிலர் மீண்டும் ரோடு வரை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் மீண்டும் ரோடுகள் பழைய நிலைக்கு வர வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போது தொப்பூர்-பவானி ரோடு அகலப்படு த்தும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஏற்கனவே இந்த ரோட்டில் இலகுரக வாகனங்கள், கனரக மற்றும் மிகவும் கனரக வாகனங்கள் ஏராள மாக சென்று வருகிறது. இதனால் இரு புறமும் ரோட்டை கடக்கவே அதிக நேரம் ஆகிறது.

ஏற்கனவே சில வருடங்களாக இந்த ரோடு 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது என கூறி வந்த நிலையில் தற்போது 2 வழிச்சாலையாகவே போடப்பட்டு வருகிறது. இந்த ரேட்டில் 100-க்கணக்கான விபத்து க்களால் உயிர் இழப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது போடும் இந்த சிறு ரோடு அகலப்படுத்தும் பணியினால் ஓரளவு விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.

எனவே நெடுஞ்சாலை த்துறை அளவீடு செய்துள்ள எல்லை வரை மீண்டும் யாரும் ஆக்கிரமிப்பு செ ய்வதை அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக சித்தாரில் தற்போது ஆக்கிரமித்துள்ள அனைத்து கடைகளையும் உடனே அகற்றி பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறு இல்லாமல் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News