உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருந்த எக்கோ ஸ்கேன் வசதி மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. 

எக்கோ ஸ்கேன் வசதி மீண்டும் செயல்பட தொடங்கியது

Published On 2023-05-11 14:50 IST   |   Update On 2023-05-11 14:50:00 IST
  • கோபி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் எக்கோ ஸ்கேன் வசதி செயல்பட உள்ளது.
  • இரு தினங்களில் செயல்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கோபி, தாளவாடி, சத்தியமங்கலம், கள்ளிப்பட்டி, கூகலூர், கெட்டிசெவியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு எக்கோ ஸ்கேன் வசதி செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக எக்கோ ஸ்கேன் செயல்ப்படவில்லை.

இதனால் இங்கு வரும் நோயாளிகள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஸ்கேன் எடுத்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் எக்கோ ஸ்கேன் வசதி செயல்பட உள்ளது. செவ்வாய், வியாழன் ஆகிய இரு தினங்களில் செயல்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News