உள்ளூர் செய்திகள்

மது போதையில் வாய்க்காலில் தவறி விழுந்தவர் சாவு

Published On 2023-02-12 09:31 GMT   |   Update On 2023-02-12 09:31 GMT
  • வாய்க்கால் தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்த ராபர்ட் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்து விட்டார்.
  • டாக்டர் ராபர்ட்டை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு:

ஈரோடு மூலப்பாளையம் பாரதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் (55). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 13 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இவரது மகன் ரிச்சர்ட் (24), மனைவி, குழந்தை–களுடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங் ேகாட்டில் வசித்து கொண்டு அங்குள்ள தார்பாய் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் ராபர்ட் வீட்டுக்கு செல்லாமல், மூலப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகில் சாலையோ ரத்திலேயே தங்கிக்கொண்டு அவ்வப்போது எலெட்ரீஷியன் வேலை செய்து கொண்டு அதில் வரும் வருமானத்தில் மது அருந்திவிட்டு சுற்றி திரிந்து வந்தார்.

அவ்வப்போது திருச்செங்கோட்டில் உள்ள தனது மகன் ரிச்சர்டையும் சென்று பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மூலப்பாளையம் டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள வாய்க்கால் தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்த ராபர்ட் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்து விட்டார்.

சிறிது நேரம் கழித்தே அவ்வழியாகச் சென்றவர்கள் வாய்க்காலில் விழுந்து கிடந்த ராபர்ட்டை கவனித்துள்ளனர்.

உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் ராபர்ட்டை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராபர்ட்டின் மகன் ரிச்சர்ட் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

Tags:    

Similar News