உள்ளூர் செய்திகள்

டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-10-07 15:13 IST   |   Update On 2023-10-07 15:13:00 IST
  • அருண் வீட்டினுள் தூக்குபோட்டு கொண்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சோலார் இரணியன் தெரு வை சேர்ந்தவர் துரைசாமி மகன் அருண் (வயது 37). இவர் அரசு பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி திவ்யா (34). இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அருணிற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் அடி க்கடி குடித்துவிட்டு வீட்டி ற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் திவ்யா தனது 2 குழந்தைகளுடன் அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து அருண் போன் செய்து திவ்யாவை வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.

ஆனால் அவர் 2 நாள் கழித்து வருவதாக கூறினார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த அருண் வீட்டினுள் தூக்குபோட்டு கொண்டார். இதைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அருண் ஏற்க னவே இருந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி திவ்யா ஈரோடு தாலுகா போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News