உள்ளூர் செய்திகள்

டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-08-22 15:31 IST   |   Update On 2023-08-22 15:31:00 IST
  • கருப்புசாமி சேலையால் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
  • பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடு த்துள்ள மேட்டுப்புதூர், கினிப்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் சென்னியம்மாள் (50). இவரது கணவர் குருநாதன் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.

இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். கடைசி மகன் கருப்புசாமி (19). டிரைவராக வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையான கருப்புசாமி தனது தாய் சென்னி யம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

மதுவுக்கு அடிமையானதை நினைத்து கருப்புசாமி கடந்த சில நாள்களாகவே விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்ப வத்தன்று மாலை சென்னி யம்மாள் வெளியில் சென்றி ருந்தார். சிறிது நேரம் கழித்து அவரது மகள் வீட்டுக்கு வந்து பார்த்த போது கருப்புசாமி சேலையால் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சி யடைந்த சென்னியம்மா ளின் மகள் அக்கம் பக்கத்தி னரின் உதவியுடன் கருப்பு சாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கருப்புசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து சென்னிய ம்மாள் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News