உள்ளூர் செய்திகள்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்

Published On 2023-08-14 14:33 IST   |   Update On 2023-08-14 14:33:00 IST
  • இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்
  • அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளை சே ர்ந்த 23 மாற்றுத்திறனா ளிகள் உட்பட 43 மாற்றுத்தி றனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 7 வருடங்களாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலசங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பா க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகி ன்றனர். இது தொடர்பாக மாவ ட்ட நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலை யில் இன்று காலை தமி ழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நல சங்கங்க ளின் கூட்டமைப்பு தலை வர் நாகரத்தினம் தலைமை யில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரப ரப்பு நிலவியது.

இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நல சங்கங்க ளின் கூட்டமைப்பு தலை வர் நாகரத்தினம் கூறும்போ து- கடந்த 7 வருடங்களாக 43 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவ டிக்கையும் எடுக்கப்படவி ல்லை. இதனால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், 43 மாற்றுத்திறனாளி களுக்கும் இலவச வீட்டும னை பட்டா வழங்க மா வட்ட கலெக்டர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்கள் போரா ட்டம் தொடரும் என்றார். இதனையடுத்து அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News