உள்ளூர் செய்திகள்

வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

Published On 2022-12-22 15:07 IST   |   Update On 2022-12-22 15:07:00 IST
  • ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் போன்றவற்றுக்காக 77,703 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

ஈரோடு:

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.சிவ சண்முகராஜா தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த ஆய்வு, வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர் சிவ சண்முகராஜா பேசியதாவது:

வரும் ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சேர்ப்பு, திருத்த முகாம் நடத்த தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குச்சாவடிகள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் போன்ற வற்றுக்காக 77,703 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அவை ஆய்வு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு மற்றும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தகுதியான வாக்காளர் பதிவு விடுபடக்கூடாது. தகுதியற்ற வாக்காளர் பதிவு இடம் பெறக்கூடாது என்ற அடிப்படையில் திருத்த பணியை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் பொன்மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குமரன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், கோபி வருவாய் கோட்டாட்சியர் திவ்யா பிரியதர்ஷினி, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News