உள்ளூர் செய்திகள்

சிவகிரியில் ஆலோசனை கூட்டம்

Published On 2023-03-15 07:20 GMT   |   Update On 2023-03-15 07:20 GMT
  • தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

சிவகிரி:

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் சிவகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் ராஜீ தலைமை தாங்கினார்.

அம்மன் கோவில் பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் மற்றும் சிவகிரி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் பரமு என்கிற ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டமைப்பின் செயலாளர் வேலுமணி வரவேற்றார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொருளாளர் ராமசாமி கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டு பால் விலை உயர்த்தி தரக்கோரி பேசினர்.

இக்கூட்டத்தில் வருகிற 17-ந் தேதிக்குள் பால் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் ஆவின் நிர்வாகத்திற்கு பால்உற்பத்தியாளர்கள் பாலை அனுப்புவதில்லை என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம், ஆவின் இயக்குனர் அசோக் குமார், கரூர் மாவட்ட தலைவர் பாலு குட்டி உள்பட 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் கரட்டாங்காட்டுப்புதூர் பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தலைவர் துரைசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News