உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2023-02-19 07:12 GMT   |   Update On 2023-02-19 07:12 GMT
  • வசந்த் பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்.
  • நீச்சல் தெரியாததால் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார்.

சத்தியமங்கலம்:

கோபிசெட்டிபாளையம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் வசந்த் (19). இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் வசந்த் தனது கல்லூரி நண்பர்க ளுடன் சத்தியமங்கலம் அடுத்த அரசூர் பவானி ஆற்று பகுதிக்கு சென்றார்.

இதையடுத்து வசந்த் பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்.

அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு நீச்சல் தெரியா ததால் அவர் திடீரென நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார்.

இதை கண்ட அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர். இவர்களது சத்தத்தை கேட்டு அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டனர். ஆனால் அவர் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

இது குறித்து போலீ சாருக்கு தகவல் கிடைத்தும் அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News