உள்ளூர் செய்திகள்

கொடுமுடி ஊராட்சி பகுதிகளில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு

Published On 2023-11-03 14:49 IST   |   Update On 2023-11-03 14:49:00 IST
  • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ரூ4.73 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
  • சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வளர்ச்சி திட்டபணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கொடுமுடி:

கொடுமுடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ரூ4.73 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

கொளத்துப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக த்துக்காக புதியதாக ரூ.32.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.15.50 லட்சம் மதிப்பில் கட்டப்ப ட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நி லை நீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கொம்பனை ப்புதூரில் உள்ள அரசினர் கால்நடை மருந்தகம், கொம்பனைப்புதூர் அரசு ஆரம்பசுகாதார நிலையம், கொந்தளம் கிராம நிர்வாக அலுவலகம், தாமரைபட பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி,

தாமரைப்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையம் , மகளிர் சுய உதவி்குழுவி னரின் விற்பனை மையம், சிவகிரியில் உள்ள உழவர் நலத்துறையின் கிருஷிசின்சாயி,

சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வளர்ச்சி திட்டபணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News