உள்ளூர் செய்திகள்

ரூ.5¾ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

Published On 2022-11-08 10:05 GMT   |   Update On 2022-11-08 10:05 GMT
  • கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடை பெற்றது.
  • மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு என மொத்தம் ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

மொடக்குறிச்சி:

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடை பெற்றது. ஏலத்தில் கொடு முடி சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த விவசாயிகள் 3,300 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 23 ரூபாய் 66 காசுக்கும், அதிக பட்ச விலையாக 25 ரூபாய் 80 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 5 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 1,132 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 27 ஆயிரத்து 98 ரூபாய்க்கு விற்பனையானது.

இதேபோல் தேங்காய் பருப்பு 162 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 80 ரூபாய் 19 காசுக்கும், அதிகபட்ச விலை யாக 82 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 82 ரூபாய் 12 காசுக்கும் ஏலம் போனது.

இதே போல் இரண்டாம் தரம் குறைந்த பட்ச விலையாக 60 ரூபாய் 89 காசுக்கும், அதிக பட்ச விலையாக 80 ரூபாய் 20 காசுக்கும், சராசரி விலையாக 75 ரூபாய் 85 காசுக்கு ஏலம் போனது.

மொத்தமாக 6,992 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 5 லட்சத்து 47 ஆயிரத்து 901 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு என மொத்தம் ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

Tags:    

Similar News