உள்ளூர் செய்திகள்

சட்டவிரோத மது விற்பனை நடந்த இடத்தில் மோதல்-போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-09-06 08:53 GMT   |   Update On 2023-09-06 08:53 GMT
  • இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
  • இதையடுத்து நாட்ராயன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெறுவதற்காக கொடுமுடி அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளார்.

சிவகிரி,

சிவகிரியை அடுத்த அம்ம ன்கோயில் அருகே பூலக்காடு என்ற இடத்தில் அரசு மதுப்பா ட்டில்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் கடை திறக்கும்வரை காத்திருக்க முடியாத மதுப்பிரியர்கள் காலையிலேயே அங்கு சென்று மதுவை வாங்கி அருந்துவது வாடிக்கை. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல அங்கு விற்ற மதுவை வாங்க நாட்ராயன் என்ற நபர் சென்று ள்ளார். அப்போது அங்கே மது வாங்க வந்த வேறு ஒரு நபரை கண்ட நாட்ராயன் அந்த நபர் அங்கு வந்திரு ப்பது குறித்து அங்கே வந்த நபரின் உறவினருக்கு செ ல்போனில் தகவல் அளித்து ள்ளார்.

இதனை கவனித்த அந்த நபர் இது குறித்து நா ட்ராயனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியு ள்ளது. இதில் நாட்ராயனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாட்ராயன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெறுவதற்காக கொடுமுடி அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு சிகிச்சைக்கு செல்லும்படி பரிந்துரைத்து அனுப்பி யுள்ளனர்.

தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் நாட்ராயன் சிகிச்சையில் உள்ளா ர். இந்த நிலையில் சம்பவம் குறித்து அறிந்த சிவகிரி போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு, பின்னர் அம்மன்கோயில் டாஸ்மாக் பாருக்கு சென்று அங்கு கடை திறப்பதற்கு முன்னரே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது ப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News