உள்ளூர் செய்திகள்

சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்த குடங்கள் எடுத்து வந்த போது எடுத்த படம்.

சென்னிமலை பகுதியில் சித்ரா பவுர்ணமி விழா

Published On 2023-05-06 09:51 GMT   |   Update On 2023-05-06 09:51 GMT
  • சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது.
  • மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

சென்னிமலை:

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலான மலைக்கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பிற்பகல் 3.30 மணியளவில் சிறப்பு ஹோமமும்,

அதனைத்தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு சந்தன அபிஷேகமும், மாலை 6 மணிக்கு மஹா தீபாராதனையும், 6.30 மணியளவில் உற்சவர் புறப்பாடும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு 10 மணி வரை நடை திறந்திருந்திருந்தது.

சென்னிமலை நகர மக்கள் குடும்பம், குடும்பமாக தங்கள் வீடுகளில் வித, விதமான உணவு பண்டங்களை தயார் செய்து மலைக்கோவிலுக்கு எடுத்து வந்து சாமி தரிசனம் செய்து கொண்டு சென்ற உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில் 47-வது ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே மடவிளாகத்தில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.

பின்னர் தீர்த்த குடங்களுடன் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நட்டாற்று ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று காவிரி தீர்த்தம் கொண்டு வந்தனர்.

பின்னர் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சந்தன அபிஷேகம், தீப அலங்கார ஆராதனை மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னிமலை அடுத்துள்ள மணிமலை மீது அமைந்துள்ள மணி மலை கருப்பராயன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், யாக பூஜை நடந்தது.

இதில்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News