உள்ளூர் செய்திகள்

சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது.

சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திறப்பு

Published On 2023-03-30 08:13 GMT   |   Update On 2023-03-30 08:13 GMT
  • உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
  • காணிக்கையாக ரூ.59 லட்சத்து 58 ஆயிரத்து ௧௯௧ செலுத்தி இருந்தனர்.

சென்னிமலை:

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடை பெற்றது.

திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான ரமணி காந்தன் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.59 லட்சத்து 58 ஆயிரத்து 191 ரூபாய் செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 291 கிராமும், வெள்ளி 6 கிலோ 152 கிராமும் காணிக்கையாக இருந்தது.

உண்டியல் திறப்பில் சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கோபி சரக ஆய்வர் ஹரி மற்றும் நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் எம்.பி.என்.எம்.ஜே பொறியியல் கல்லூரி மாணவர்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள், அர்ச்சக ர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News