உள்ளூர் செய்திகள்

சென்ட்ரிங் தொழிலாளி நீரில் மூழ்கி சாவு

Published On 2023-09-18 14:16 IST   |   Update On 2023-09-18 14:16:00 IST
  • சென்ட்ரிங் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்
  • புகா ரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஈரோடு,

கோவை மாவட்டம் வெள்ள க்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் சிவராமன் (வயது 42). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சம்பவத்தன்று சென்னிமலை முதலைமடை எல்.பி.பி வாய்க்கால் பாலம் அருகே நீரில் மூழ்கி பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அவரது சகோதரி சிவ லட்சுமி சென்னிமலை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகா ரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News