உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கைதான மேலும் ஒரு வாலிபர் சிறையில் அடைப்பு

Published On 2023-05-05 09:17 GMT   |   Update On 2023-05-05 09:17 GMT
  • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
  • இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு வரை தேடிவருகிறார்கள்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 சிறுமிக்கு 4 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக சிறுமியின் உறவினர் மற்றும் வாசுதேவன் ஆகிய 2 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இது தொடர்பாக நேற்று சிவக்குமார் (24) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு வரை தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News