உள்ளூர் செய்திகள்
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அங்கன்வாடி பணியாளர் சாவு
- மோட்டார் சைக்களில் இருந்து ஈஸ்வரி தடுமாறி கீழே விழந்தார்.
- சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி இறந்தார்.
பெருந்துறை:
பவானி அடுத்த பாண்டி யம்பாளையத்தை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 52). இவர் பெருந்துறை அருகி லுள்ள கள்ளாங்காட்டுபுதூர் அங்கன்வாடி மையத்தில் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று ஈஸ்வரி தன் மகன் கண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் பெருந்துறைக்கு வந்து பொருட்கள் வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் பெருந்துறை, அண்ணாசிலை அருகில் மோட்டார் சைக்க ளில் இருந்து ஈஸ்வரி தடு மாறி கீழே விழந்தார்.
இதில் பலத்த காயம் அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.