உள்ளூர் செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட முதியவர்-வாலிபர் கைது

Published On 2023-10-05 15:10 IST   |   Update On 2023-10-05 15:10:00 IST
  • 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடம் இருந்து ஒரு பவுன் நகை மீட்கப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு கதிரம்பட்டி நஞ்சனாபுரம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ். இவரது மனைவி கமலா (54). நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள 3 வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று காலை சின்னமேடு நஞ்சனாபுரம் செல்லும் சாலையில் தங்கம் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கமலாவிடம் முகவரி கேட்பது போல அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

அப்போது மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் கமலா காலத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்து அங்கிருந்து தப்பினர்.

ஈரோடு தாலுகா போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களின் மோட்டார்சைக்கிளின் பதிவு எண் பதிவாகி இருந்தது. இதை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில்,

வழிப்பறியில் ஈடுபட்டது திருப்பூர் மாவட்டம் மடத்து குளத்தை சேர்ந்த சூர்யா என்கிற ஜெகதீஷ் (27), திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதி பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் (60) என தெரிய வந்தது

இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு பவுன் நகை மீட்கப்பட்டது. வழிப்பறிக்கு பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News