உள்ளூர் செய்திகள்

ரோட்டை கடப்பதற்காக வேகமாக ஓடி வந்த யானை

Published On 2023-03-20 15:24 IST   |   Update On 2023-03-20 15:24:00 IST
  • ஒரு யானை ரோட்டை கடப்பதற்கு வேகமாக ஓடி வந்தது.
  • இதைப்பார்த்த வாகன ஓட்டி திடீர் பிரேக் பிடித்தார்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

தற்பொழுது வனப்பகுதியில் நிலவி வரும் வறட்சி காரணமாக தண்ணீர், உணவு தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடப்பது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஒரு யானை ரோட்டை கடப்பதற்கு வேகமாக ஓடி வந்தது.

இதைப்பார்த்த வாகன ஓட்டி திடீர் பிரேக் பிடித்தார். இதனால் யானை பயங்கர சத்தம் போட்டது.

பின்னர் யானை ரோட்டை கடந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. இதைக்கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

இது பற்றி வனத்துறை யினர் கூறும்பொழுது,

வரும் 2 மாதங்களுக்கு யானைகள் தண்ணீருக்காக ரோட்டை அங்கும் இங்கும் கடப்பது அதிகமாக இருக்கும்.

அதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதிக்குள் மெதுவாக வாகனத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News