- ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் நாளை சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் 222 வாக்குசாவடி மையங்களில் நடைபெற உள்ளது.
- இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கும் வகையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை விரைவாக முடிக்கவும், பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் 222 வாக்குசாவடி மையங்களில் நடைபெற உள்ளது.
எனவே சிறப்பு முகாமில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு அவரவர் வாக்குசாவடியில் உள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் 6பி படிவத்தினை பூர்த்தி செய்து தருவதன் மூலம் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து ஈரோடு மாவட்டத்தினை முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.