உள்ளூர் செய்திகள்

சேனைக்கிழங்கில் பூத்த வித்தியாசமான பூ

Published On 2023-05-22 13:01 IST   |   Update On 2023-05-22 13:01:00 IST
  • ஒரு கிழங்கில் மட்டும் வித்தியாசமான பூ பூத்திருந்தது.
  • பூவை அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

சென்னிமலை, 

சென்னிமலை அடுத்த முருங்கத்தொழுவு ஊராட்சி, கருங்கவுண்டன்வலசு பகுதியினை சேர்ந்தவர் பூபதி.

விவசாயியான இவர் தனது தோட்டத்தில் சேனைக்கிழங்கு பயிரிட்டுள்ளார். அதில் ஒரு கிழங்கில் மட்டும் வித்தியாசமான பூ பூத்திருந்தது.

இந்த பூ பூத்த தகவல் கிராமத்தில் பரவியது. இதை தொடர்ந்து இந்த சேனைக்கிழங்கு பூவை அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Tags:    

Similar News