உள்ளூர் செய்திகள்

வாய்க்காலில் நீச்சல் பழகிய பள்ளி மாணவன் சாவு

Published On 2023-09-18 14:20 IST   |   Update On 2023-09-18 14:20:00 IST
  • வாய்க்காலில் நீச்சல் பழகிய பள்ளி மாணவன் உயிரிழந்தார்
  • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி மகன் சஞ்சை (வயது 17). இவர் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பெருந்துறை ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் தனது தந்தை உறவினர் கோபால் உதவியுடன் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு நீச்சல் பழகினார். அப்போது இடுப்பில் இருந்த கயிறு திடீரென்று அவிழ்ந்ததால் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தார். இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சஞ்சையின் உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News