உள்ளூர் செய்திகள்

அம்மாபேட்டை அருகே 2 கன்றுகளை ஈன்ற பசு

Published On 2023-08-08 15:08 IST   |   Update On 2023-08-08 15:08:00 IST
  • ஒரு பசு நிறைமாத சினையாக இருந்தது.
  • அப்போது பசு 2 கடேரி கன்றுகளை ஈன்றிருந்தது.

அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே சிங்கம்பேட்டை புதுக்கோட்ரஸ் பகுதியை சேர்ந்த வர் வேலுசாமி (40). இவர் பவானி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி கோமதி என்பவர் அப்பகுதியில் 2 பசு மாடு மற்றும் ஒரு எருமை மாடு ஆகியவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஒரு பசு நிறைமாத சினையாக இருந்தது. திடீரென பசு கத்தும் சத்தம் கேட்டது.

இதையடுத்து அவரகள் சென்று பார்த்தனர். அப்போது பசு 2 கடேரி (பெண்) கன்றுகளை ஈன்றிருந்தது. 2 கன்றுகளை ஈன்ற பசுவை அப்பகுதியில் இருந்தவர்கள் வந்து பார்த்து சென்றனர்.

Tags:    

Similar News