உள்ளூர் செய்திகள்

சென்னிமலை முருகன் கோவிலில் 8-ந்தேதி நடை அடைப்பு

Published On 2022-11-03 09:31 GMT   |   Update On 2022-11-03 09:31 GMT
  • சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்படுகிறது.
  • இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை.

சென்னிமலை:

சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் வருகிற 8-ந்தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்படுகிறது.

அதனால் காலசந்தி பூஜை, உச்சிகாலம், சாயரட்சை பூஜை நடைபெற்று பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை சென்னிமலை முருகன் கோவில் சுவாமி மூலஸ்தான கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும்.

இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை. இரவு 7.35 மணிக்கு நடை திறக்கப்பட்டு கிரகண தோஷ சாந்தி சிறப்பு பூஜை நடத்தப்படும்.

அதன் பின்பு பக்தர்கள் அனுமதிக்க–ப்படுவர். அன்று மட்டும் இரவு வேங்கை மர ரதம் உலா நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News