உள்ளூர் செய்திகள்

தள்ளுவண்டியில் மதுவிற்பனை செய்த 3 பேர் கைது

Published On 2022-12-01 09:51 GMT   |   Update On 2022-12-01 09:51 GMT
  • கடத்தூர் பகுதியில் சிலர் தள்ளுவண்டிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • இதையடுத்து கடத்துர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டி புகாரின் பேரில் போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கடத்தூர் பகுதியில் சிலர் தள்ளுவண்டிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடத்தூர் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

அப்போது உக்கரம் குப்பன்துறை பகுதியை சேர்ந்த நடுபழனி (75), அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி(40), வண்டிப் பாளையம் விநாயகா நகரை சேர்ந்த மருதாசலம் (46) ஆகியோர் தள்ளுவண்டியில் மது விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கடத்துர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டி புகாரின் பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News