உள்ளூர் செய்திகள்

2600 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்

Published On 2022-09-03 07:57 GMT   |   Update On 2022-09-03 07:57 GMT
  • ஒட்டர்கரட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு மளிகை கடையில் 2600 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கோவை, ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்த வேணு என்பவரை கைது செய்தனர்.

ஈரோடு:

கடத்தூர் அடுத்துள்ள ஒட்டர்கரட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு மளிகை கடை முன்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சோதனையிட்ட போது ஏராளமான குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான 2600 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கோவை, ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்த வேணு (37) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News