உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2023-06-18 07:20 GMT   |   Update On 2023-06-18 07:20 GMT
  • ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
  • போலீசார் 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

பவானி:

பவானி தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் தன்னிடம் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை வாங்க சொல்லி வற்புறுத்தி வரும் 2 பேர் குறித்து பவானி போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து சம்பவயிடம் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்த தனபால் (47) மற்றும் பழனிபுரம் பகுதியை சேர்ந்த குமரேசன் (47) ஆகிய 2 பேரும் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

Similar News