உள்ளூர் செய்திகள்

போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது

Published On 2023-11-17 09:28 GMT   |   Update On 2023-11-17 09:28 GMT
  • ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
  • அதில் போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே ஆசனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் விசாரணையில் அதில் இருந்த 2 பேர் கோவை மாவட்டம் மேட்டு ப்பாளையம் பழத்தோட்டம் காந்தி தெருவை சேர்ந்த சங்கரன் மகன் சஜீஸ் (வயது 32), கோவை மாவட்டம் சிறுமுகை பள்ளிவாசல் தெரு வேலாயுதம் மகன் பிரகாசம் (38) என்பதும், அவர்கள் விற்பனைக்காக போதைப்பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

பின்னர் போலீசார் அவர்கள் இருவரை கைது செய்தனர்.

மேலும் கடத்தி வரப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட 566 கிலோ எடை மதிப்புள்ள போதைப்பொ ருட்கள் மற்றும் கார் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தப் போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்து 680 ஆகும். மேலும் ஆசனூர் போலீ சார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News