உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2023-06-22 09:08 GMT   |   Update On 2023-06-22 09:08 GMT
  • போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
  • அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு டவுன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.வி.சி.ஆர். நகர், அய்யனாரப்பன் கோவில் பின்புறம் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தீனா (21), கருங்கல்பாளையத்தை சேர்ந்த முகேஷ் (21) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1,500 மதிப்பிலான 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News