உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2023-11-04 07:59 GMT   |   Update On 2023-11-04 07:59 GMT
  • சம்பளம் கொடுக்காததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
  • அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பு.புளியம்பட்டி:

புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளம் கொடுக்காததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாவட்ட கலெக்டரிடம் உங்களது குறைகளை கூறியுள்ளோம்.

மேலும் இன்னும் சில தினங்களில் உங்களுக்கு கொடுக்க வேண்டிய 3 மாத சம்பள பாக்கியினை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News