உள்ளூர் செய்திகள்

சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

உதயமார்தாண்டபுரம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

Published On 2023-01-14 09:02 GMT   |   Update On 2023-01-14 09:02 GMT
  • உதயமார்தாண்டபுரம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
  • ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி:

உதயமார்தாண்டபுரம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மேற்பார்வையாளரக கலந்து கொண்டார்.

ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தூய்மை ஊழியர்களுடன் இணைந்து ஊராட்சி மன்ற துைண தலைவர் புவனேஸ்வரி விஜயபாஸ்கர், 1-வது வார்டு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், 4-வது வார்டு உறுப்பினர் கவிதா தெய்வராஜன், 5-வது வார்டு உறுப்பினர் செல்லப்பா என்கிற தாஜுதீன், 6-வது வார்டு உறுப்பினர் அஜிரன் அலிமா காதர், 7-வது வார்டு உறுப்பினர் வாசுகிஅண்ணாதுரை, 8-வது வார்டு உறுப்பினர் ராயல்காதர், ஊராட்சியின் திட்ட ஒருங்கினைப்பாளர் உஷா பணி மற்றும் அனைத்து பணிதள பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஊராட்சியின் அனைத்து பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முடிவில் ஊராட்சி செயலர் பிரவீனா நன்றி கூறினார்.

Tags:    

Similar News