வீரவநல்லூரில் வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருள் முகிலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- படிப்பை முடித்துவிட்டு அருள் முகிலன் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளார்.
நெல்லை:
வீரவநல்லூர் அருகே உள்ள முனைசேகரகுடியிருப்பு ஆலடி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் அருள்முகிலன்(வயது 25). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று அருள்முகிலன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிப்பை முடித்துவிட்டு அருள் முகிலன் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளார்.
ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.