உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் மின் இணைப்புகள் தவறாகபயன்படுத்தியது கண்டுபிடிப்பு

Published On 2023-02-23 10:35 GMT   |   Update On 2023-02-23 10:35 GMT
  • அபராதத்தொகை யாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 518 வசூலிக்கப்பட்டது.
  • உதவி செயற்பொறியாளர்கள் . உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை அருளானந்தநகர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) விமலா தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது. 89 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. இவற்றில் 9 மின் இணைப்புகள் தவறாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அபராதத்தொகை யாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 518 வசூலிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News