உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டங்கள் - அதிகாரி அறிவிப்பு

Published On 2023-03-02 09:59 GMT   |   Update On 2023-03-02 09:59 GMT
  • நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்சார வாரியம் சார்ந்த குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
  • 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை நகர் புறகோட்ட அலுவலகத்திலும் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

நெல்லை:

நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதவாது:-

நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்சார வாரியம் சார்ந்த குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

அதன்படி வருகிற 7-ந் தேதி (செவ்வாய்கிழமை) வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 14-ந் தேதி (செவ்வாய் கிழமை) நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை நகர் புறகோட்ட அலுவலகத்திலும், 20-ந் தேதி (திங்கட்கிழமை) தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், 28-ந் தேதி (செவ்வாய்கிழமை) கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News