உள்ளூர் செய்திகள்

நாவல் பழம் பறித்த பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2022-07-29 03:04 GMT   |   Update On 2022-07-29 03:04 GMT
  • மனோஜ், விக்னேசுவரன் பள்ளிக்கு வெளியே சென்று, சிறிது தூரத்தில் உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்தனர்.
  • நாவல் பழங்களை பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மரக்கிளை முறிந்து மின்சார வயர் மீது விழுந்தது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் சீனிமடை கிராமத்தை சே்ாந்த மருதுபாண்டி மகன் மனோஜ் (வயது 13). இவர் கீழ கொம்புகாரனேந்தல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

மிளகனூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் விக்னேசுவரன் (15). அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

நேற்று மனோஜ், விக்னேசுவரன் பள்ளிக்கு சென்றிருந்த நிலையில், மதிய உணவு இடைவெளியின்போது அவர்களும், மேலும் சில மாணவர்களும் சேர்ந்து பள்ளிக்கு வெளியே சென்று, சிறிது தூரத்தில் உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்தனர். அந்த மரத்தை தொட்டு மின்சார வயர் சென்றது.

நாவல் பழங்களை பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த மரக்கிளை முறிந்து மின்சார வயர் மீது விழுந்தது. இதில் வயர் மீது விழுந்த மனோஜ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேசுவரன் பலத்த காயம் அடைந்தார்.

Tags:    

Similar News