உள்ளூர் செய்திகள்

சுரண்டை அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை

Published On 2023-07-12 09:14 GMT   |   Update On 2023-07-12 09:14 GMT
  • மாணிக்கம் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
  • கடந்த 4 ஆண்டுகளாக மாணிக்கம் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

நெல்லை:

சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 65). இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கடந்த 4 ஆண்டுகளாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகாததால் அவர் வாழ்வில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News