உள்ளூர் செய்திகள்

பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-08-11 10:12 GMT   |   Update On 2023-08-11 10:12 GMT
  • மாணவர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.
  • போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை ரெயில் நிலையம் முன்பு இன்று போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாணவ -மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி சென்றனர்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், உதவி ஆணையர் (கலால் ) பழனிவேல், கோட்ட கலால் அலுவலர்கள் தங்க பிரபாகரன், அருணகிரி, தாசில்தார் சக்திவேல், ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News