உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடந்தது.

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-06-26 15:10 IST   |   Update On 2023-06-26 15:10:00 IST
  • போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • 300-க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

வேளாங்கண்ணி பழைய காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி கடைத்தெரு, பேராலயம் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

அப்போது மது மற்றும் போதை பொருட்களால் எற்படும் தீமைகளை குறித்தும் குடிக்கும், போதைக்கும், யாரும் அடிமையாகக்கூடாது என்பதை வலியுறுத்தியும் மாணவர்கள், காவல்துறையினர், தன்னார்வலர்கள், என 300, க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கடற்கரை அருகே உள்ள பூங்கா வரை சென்றனர்.

Tags:    

Similar News